செய்முறை
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி, 1 3/4 கப் நல்ல தண்ணீரில்
10 நிமிடம் ஊறவைக்கவும்
அதிக நேரம் ஊறினால் அரிசி உடைந்து விடும்.
1 பீட்ரூடை துருவி வைக்கவும்
பின் குக்கரில் 1 கரண்டி எண்ணெய் விட்டு,
2 பட்டை,கிராம்,பி.இலை.....
தாளித்து
1 நறுக்கிய வெங்காயம், 3 பச்சைமிளகாய்
சேர்த்து வதக்கவும்
பின் துருவிய காய், 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது
1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் மல்லிதூள்
சேர்த்து, 1 நிமிடம் வதக்கி
1 மேஜைகரண்டி தயிர் சேர்த்து, 2 நிமிடம் வதக்கவும்
பிறகு ஊறவைத்த அரிசி அந்த நீருடனையே சேர்த்து,
1 டீ.ஸ்பூன் உப்பு
கொத்தமல்லி தழை
2 ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய்
1/2 கப் பச்சை பட்டாணி
சேர்த்து சமமாக கலந்து
குக்கரை மூடி , ஹையில் 1 விசில் விட்டு
அடுப்பை அணைக்கவும்.
சாதம் உடையாமல் சமமாக கலந்து விடவும்.
சூடான பொழுபொழு (அரிசி ஒட்டாமல் ) புலாவ் தயார்
குழந்தைகளுக்கு ஸ்கூலுக்கு தர , எளிதில் செய்ய கூடிய
சத்தான உணவு,
சிப்ஸ் அல்லது வெங்காய ரைத்தாவுடன் பறிமாறலாம்
No comments:
Post a Comment