செய்முறை
குக்கரில் 2 கரண்டி எண்ணெய் விட்டு, 2 பட்டை லவங்கம்
ஏலக்காய், மிளகு ......தாளித்து
1 வெங்காயம் , 4 பச்சைமிளகாய் சேர்த்து
பொன்னிறம் வரும் வரை வதக்கி
பிறகு
1/2 கி மட்டன், 1 மேஜைகரண்டி இஞ்சிபூண்டு விழுது
1 சிறிய தக்காளி, 1 ஸ்பூன் மிளகாய்தூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலாதூள், மல்லிதூள்
சேர்த்து நன்றாக வதக்கவும்
பின் 1/2 கரண்டி தயிர், புதினாகொத்தமல்லி, உப்பு
சேர்த்து கலந்து, 1/4 கப் தண்ணீர் சேர்த்து
குக்கரை மூடி 3 விசில் விடவும்.
பிறகு
400 கிராம் பாஸ்மதி அரிசியை 5 நிமிடம் ஊறவைத்து,
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து,
அதில் உப்பு, சிறிது எண்ணெய், சோம்புதூள், கரம்மசாலா பொருட்கள்
சேர்த்து,அரிசியை கொட்டி
90% வேகவைக்கவும்
தண்ணீரை வடித்து வைக்கவும்.
தம் செய்ய:
ஒரு அகண்ட பாத்திரத்தில்
பாதி மட்டன் மசாலாவை போடவும்
சிறிது எலுமிச்சை பிளியவும்
வடித்த பாதி அரிசியை பரவலாக போடவும்,
சிறிது கொத்தமல்லி,
கலர் அல்லது குங்குமப்பூ நீர் தெளித்து
மீண்டும் மட்டன் கலவை
பின் சாதம் என போடவும்.
கெட்டியாக மூடி, அடுப்பை முழு சிம்மில் வைத்து
15 - 20 நிமிடம் வரை விட்டு, அடுப்பை அணைக்கவும்.
( ஒரு ஸ்பூனை பாத்திரத்தின் கீழ் வரை விட்டு பார்க்கவும்.
மசாலா சுண்டி இருக்கும்.)
அடுப்பை அணைத்து, சமமாக பிரியாணியை
கலந்து விடவும்
முட்டை, கொஸ்து,தயிர் பச்சடியுடன் பறிமாறவும்.
குறிப்பு:
அரிசியை நீண்ட நேரம் ஊறவிட்டால் , சாதம் உடைந்து போகும்
No comments:
Post a Comment