செய்முறை
முதலில் காலிஃப்லவரை தயார் செய்து வைக்கவும்
பின்
மசாலா செய்ய:
2 பெரியவெங்காயம்
2 தக்காளியை நறுக்கி
சிறிது முந்திரி பருப்பு சேர்த்து,
சிறிது நீர்விட்டு
குக்கரில் 2 விசில் விட்டு வேகவைத்து, ஆறியதும்
தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்
தண்ணீரை தனியாக வைக்கவும்.
பின் ஒரு கடாயில் 2 மேஜைகரண்டி வெண்ணெய் சேர்த்து,
அதில் 2 பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து
அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து
5 நிமிடம் வதக்கவும்
பின் 1/2 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது,
1 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1 ஸ்பூன் மல்லிதூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி
காலிஃப்லவரை பேக் செய்யும் பொழுது, அதில் மீதமான
ஊறவைத்த தயிர் கலவை சேர்க்கவும்
பிறகு, வெங்காயம் வேகவைத்த நீர்,
பொடியாக நறுக்கிய 1/2 தக்காளி
கொத்தமல்லி தழை
1/2 ஸ்பூன் கசூரிமேத்திClick here for recipe
1 ஸ்பூன் சர்க்கரை
சேர்த்து கலந்து, 5 நிமிடம் மிதமான தனலில் கொதிக்க விட்டு
அதில் தயார் செய்த காலிஃப்லவரை சேர்த்து, கொத்தமல்லி தூவி, 5 நிமிடம்
சிம்மரில் , மூடி வைத்து, அடுப்பை அணைக்கவும்.
சூடான பட்டர் கோபி மசாலாவுடன் சூடான கார்லிக் நாண், ரோடி வைத்து
பறிமாறவும்.
ஓவன் இல்லாதவர்கள்,
இந்த லிங்கில் உள்ளவாறு பொறித்து, இதே போல் கடைசியாக
மசாலாவில் சேர்க்கவும்
சுவையாக இருக்கும்
No comments:
Post a Comment