செய்முறை
400 கிராம் பாஸ்மதி அரிசியை கழுவி, 300 மி தண்ணீரில் 5 நிமிடம்
ஊறவைக்கவும்.
குக்கரில் 1 கரண்டி எண்ணெய் விட்டு, பட்டை, மசாலா பொருட்கள் தாளித்து
1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது, 1 வெங்காயம் நறுக்கியது
சேர்த்து வதக்கவும்.
பின் ஊறிய தண்ணீருடன் அரிசியைக் கொட்டி,
2 டீ.ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து,
மூடி, 1 விசில் ஹையில் விட்டு அடுப்பை அணைக்கவும்
அரிசி 90% வெந்திருக்கும்.
பின் சாதத்தை ஒரு அகண்ட பாத்திரத்தில் கொட்டி, உதிரியாக்கி
விட்டு, மூடி வைக்கவும்.
( குறிப்பு:
சாதம் வேகும் சமயத்தில், மீனை தயாராக்கவும்.)
ஒரு அகண்ட பாத்திரத்தில், 1 கரண்டி எண்ணெய் விட்டு
1 வெங்காயம் , 4 பச்சை மிளகாய்
நறுக்கியதை சேர்த்து வதக்கவும்
பின் 1 மேஜைகரண்டி இஞ்சிபூண்டு விழுது,
நறுக்கிய
1 தக்காளி, கொத்தமல்லி புதினா
சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், அதில்
1 டீ.ஸ்பூன் மிளகாய்தூள்
1/2 ஸ்பூன் மல்லி தூள்
1/2 ஸ்பூன் கரம்மசாலா தூள்
உப்பு
மஞ்சதூள், சேர்த்து நன்றாக வதக்கி
அதில் 1/2 எலுமிச்சை பழத்தை பிளியவும்.
பின் சுத்தம் செய்த 1/2 கிலோ
(முள் அதிகமில்லாத வகை) மீனை
துண்டுகளாக்கி சேர்த்து,
பிரட்டி, 5 நிமிடம் சிம்மரில் மூடி வைக்கவும்.
மீன் 3/4 பதம் வெந்து விடும்.
மீனை மட்டும் மசாலா இல்லாமல் தனியாக எடுத்து
வைக்கவும்.
பிறகு
தம் செய்ய:
ஓவனை 180*செ இல் பேக்கிங் மோடில் ,
ப்ரீ ஹீட் செய்யவும்.
ஒரு பேக்கிங் பாத்திரம் எடுத்து,
மசாலாவை போடவும்.
அதன் மேல்
பாதி சாதத்தை போட்டு, பரப்பி விடவும்
சிறிது கொத்தமல்லி,
கலர் அல்லது குங்குமப்பூ நீர் தெளித்து
மீன் மற்றும் மசாலாவை போடவும்
பின் மீண்டும்
சாதம் ,மீன் மற்றும் மசாலா என போடவும்.
இறுதியாக மேலே சிறிது
நெய் ஊற்றவும்.
பின் பாத்திரத்தை அலுமினியம் ஃபாய்ல் கொண்டு
கெட்டியாக மூடி,
ஓவனில் 15 முதல் 25 நிமிடம் வரை வைக்கவும்.
( ஒரு ஸ்பூனை பாத்திரத்தின் கீழ் வரை விட்டு பார்க்கவும்.
மசாலா சுண்டி இருக்கும்.)
மசாலா சுண்டியதும்,
வெளியே எடுத்து, ஒரு அகண்ட பாத்திரத்தில் ,
அப்படியே திருப்பி கொட்டவும்
சமமாக மீன் உடையாமல்
கலந்துவிடவும்
சுவையான பிரியாணி தயார்
வெங்காய தயிர் பச்சடியுடன் பறிமாறவும்
No comments:
Post a Comment